ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய ராணுவத்தினர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து வரும் நிலையில், தீவிரவாத முகாம்களை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து இரண்டு பெண் அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்து வருகின்றனர்.
இதில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவத்தின் சார்பில் சோபியா குரேஷி விமானப்படையின் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பேசி வருகின்றனர். குறிப்பாக பெண் ராணுவ அதிகாரிகளான சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகியோர், இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.
மேலும், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும், அதற்கு தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.