தொழிலதிபர் கே.சந்தர் ரெட்டிக்கு சொந்தமான ரிசார்ட்டில், ஒரு உர நிறுவனம் தனது டீலர்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தது. திடீர் சோதனை நடத்திய காவல்துறை, அங்கிருந்த 50 பேரைக் கைது செய்ததுடன், வெளிநாட்டு மதுபானங்களையும் பறிமுதல் செய்தது.
ரேவ் பார்ட்டிகளுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் தெலுங்கானா காவல்துறையின் மற்றொரு வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இதேபோன்ற சோதனையில், 22 சிறார்கள் உட்பட 65 பேர் போதைப்பொருட்களுடன் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.