ஐதராபாத்தில் 41 வயதான கணவரும், 37 வயதான அவரது மனைவியும் மொபைல் செயலி மூலம் தங்கள் பாலியல் செயல்களை நேரலையில் ஒளிபரப்பி, அதற்கு பணம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பர்பேட் பகுதியின் மல்லிகார்ஜுனா நகரை சேர்ந்த இந்த தம்பதியை, காவல்துறையின் சிறப்புப் படை கைது செய்தது. அவர்களின் வீட்டிலிருந்து உயர் வரையறை கொண்ட கேமராக்கள் உட்பட பல உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தத் தம்பதி, தங்கள் பாலியல் செயல்களின் நேரலை மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை, அதற்கான பணத்தை செலுத்த தயாராக இருந்த செயலி பயனர்களுடன் பெரும்பாலும் இளைஞர்களுடன் பகிர்ந்து கொண்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஒரு நேரலை வீடியோவுக்கு ரூ.2,000 வசூலித்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட வீடியோ கிளிப் ரூ.500க்கு விற்கப்பட்டுள்ளது.