பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றில் தவறுதலாக துணி வைத்து தைத்த டாக்டர்: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (15:56 IST)
25 வயது பெண்ணின் வயிற்றில் வயிற்றில் தவறுதலாக டாக்டர்கள் துணி வைத்து தைத்த விவகாரம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் 25 வயது பெண்ணுக்கு சமீபத்தில் பிரசவம் நடந்த போது அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக பெண்ணின் வயிற்றுக்குள் துணியை வைத்து தைத்துள்ளதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலியை அடுத்து அந்த பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோத், பெண்ணின் வயிற்றில் துணி இருப்பது தெரியவந்தது 
 
இதனை அடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அந்த துணியை அகற்றினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து போலீசார் பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்