வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம் தகவல்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (07:41 IST)
தேர்தல் பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை அதிகரித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களுக்கான செலவு தொகையை அதிகரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் தற்போது வேட்பாளர்களுக்கு ஆகும் தேர்தல் செலவை உச்ச வரம்பை 40 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளது
 
மேலும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்றும் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்