அமரிந்தர் சிங்கின் கட்சியுடன் பாஜக கூட்டணி!!

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:25 IST)
பாரதிய ஜனதா கட்சி, முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவிப்பு. 

 
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்துவுக்கு வெளிப்படையான மோதல் போக்கு இருந்து வந்தது. இதனிடையே அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதன் பின்னர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கினார். ஆம், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை அவர் தொடங்கினார். 
 
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் அமரிந்தர் சிங்கின் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்தில், அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என முன்னர் தெரிவித்தார். 
 
அந்த வகையில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா என 3 அணிகள் மோதும் மும்முனை போட்டியாக பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் அமைய உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்