அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்.. கைதாக வாய்ப்பா?

Mahendran

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (12:15 IST)
ரூ.17,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடர்பான வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
 
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகளிலும், வங்கி கடனை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஜூலை 24 முதல் மூன்று நாட்களுக்கு, அனில் அம்பானிக்கு தொடர்புடைய 50 நிறுவனங்கள் மற்றும் 25 நபர்களின் 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
 
இந்த சோதனைகளின் தொடர்ச்சியாக, அனில் அம்பானி மற்றும் அவரது குழுமத்தை சேர்ந்த சில நிர்வாகிகளுக்கும் விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
 
இந்த நிலையில், இன்று அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே கைதாவாரா? என்பது தெரிய வரும்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்