அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தீர்வு செயல்முறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின்படி, திவால் என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெறுவதற்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.