திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

Siva

வெள்ளி, 25 ஜூலை 2025 (17:07 IST)
ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், ஒரு பெண் காவலர் தனது காதலன் வீட்டின் முன்பு தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததே இந்த விபரீத செயலுக்குக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர், அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில், திடீரென காதலர் தனது வீட்டில் தங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், அதனால் திருமணம் செய்ய முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
 
காதலரின் இந்த மறுப்பால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர், உடனடியாக காதலரின் வீட்டிற்கு முன்பு வந்து, தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது உடல் முழுவதும் தீப்பற்றி கொண்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
தற்போது அந்தப் பெண் காவலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், காதலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்