உன்ட்வாஸ் கிராமத்தை சேர்ந்த 45 வயதுப் பெண்ணின் மகனுக்கும், 50 வயதுடைய நபரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நிச்சயதார்த்தத்துக்கு முன்பே, மணமகனின் தாய்க்கும், மணமகளின் தந்தைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண் ஒரு வாரம் காணாமல் போகவே, குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.
விசாரணையில், அப்பெண் தனது மகனுக்கு சம்பந்தி ஆகவிருந்தவருடன் விருப்பப்பட்டு ஓடிப்போனது தெரியவந்தது. காவல் நிலையத்தில் ஆஜரான இருவரும், தாங்கள் காதலிப்பதாகவும், ஒன்றாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர்.