விசாகப்பட்டினத்தில் ஆந்திரப் பிரதேச அரசின் ஆட்சி நிர்வாகம்: முதல்வர் திடீர் முடிவு..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:31 IST)
தற்போது ஆந்திரா அரசு நிர்வாகம் அமராவதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து செயல்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 
 
அக்டோபர் 23ம் தேதி விஜய தசமி முதல் ஆந்திரப் பிரதேச அரசின் ஆட்சி நிர்வாகத்தை விசாகப்பட்டினத்தில் இருந்து நடத்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தற்போது அமராவதியை தலைமையிடமாக கொண்டு அரசு செயல்பட்டு வரும் நிலையில், விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகங்களை தேர்வு செய்ய குழுவை நியமிக்கவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்