உதயநிதியின் புகைப்படத்தை மிதித்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. ஆந்திராவில் பரபரப்பு..!

புதன், 20 செப்டம்பர் 2023 (07:48 IST)
ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வந்த பக்தர்கள் உதயநிதியின் புகைப்படத்தை மிதித்து சென்று கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சென்ற பக்தர்கள் செல்லும் வழியில் உதயநிதியின் புகைப்படத்தை கீழே வைத்திருந்தனர் 
 
பக்தர்கள் உதயநிதியின் புகைப்படத்தை மிதித்துக் கொண்டு உள்ளே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்