இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, அவர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், அங்கு கருப்பு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சரமாரியாக இந்திய மாணவி மிது துப்பாக்கி சூடு நடத்தி தப்பித்து சென்றனர்.
இந்த நிலையில் கொலைக்காரர்களை கண்டுபிடிக்க, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், விசாரணையை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்திய மாணவியை திட்டமிட்டு கொலை செய்தார்களா? அல்லது வேறு யாரையாவது கொலை செய்வதற்காக வந்தவர் தவறுதலாக இந்த மாணவியை கொலை செய்தார்களா? என்பதைக் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த மாணவி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கனடாவில் உள்ள இந்திய தூதரகம், மாணவியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.