கேரளாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்.. 60 பேர் பலி.. தமிழக எல்லையில் கண்காணிப்பு..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (16:04 IST)
கேரளாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி வருவதாகவும் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமிழக கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
கேரளாவில் டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல் ஆகியவை பரவி வரும் நிலையில் தற்போது ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் என்ற புதிய காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தமிழக கேரளா எல்லையோர பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மேலும் கேரளாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்