இதனால் அந்த பகுதி முழுவதும் தீப்பற்றி எரிவதாகவும் புகை மட்டமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஸ்டார்ஷிப் விண்கலம் இம்மாத இறுதியில் விண்ணுக்கு அனுப்ப ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக கடந்த மே மாதம் 28ஆம் தேதி எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டு பின்னர் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.