உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில், 2013ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கோர நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்த நிலையில், ராணுவமும் காவல்துறையும் இணைந்து கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேரை காப்பாற்றினட்.
பின்னர் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்தப் பெருவெள்ளத்தில் 4,400 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 735 உடல் பாகங்கள் மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டன. ஆனால், 12 ஆண்டுகள் கடந்த பின்னரும், காணாமல் போனவர்களின் உறவினர்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்ட போதிலும், இன்னும் 702 உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது.