5ஜி ஏலம்: நேருக்கு நேர் மோதும் அம்பானி - அதானி?

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:39 IST)
இந்தியாவில் 5ஜி ஏலம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அம்பானி மற்றும் அதானி ஆகிய இரண்டு தொழிலதிபர்கள் நேருக்கு நேர் இந்த ஏலத்தை எடுக்க போட்டி போடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
5ஜி ஏலத்திற்கு அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இம்மாத இறுதியில் ஏலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
20 ஆண்டுகளுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது என்றும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கு மதிப்பு 4.3 லட்சம் மதிப்பு வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஜியோ ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதானியும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது
 
5ஜி  ஏலத்தில் அம்பானி மற்றும் அதானி நேருக்கு நேர் மோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்