இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (10:29 IST)
நேற்று காலை பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்தாலும் மதியத்திற்கு பின்னர் திடீரென சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது.
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குமார் 190 புள்ளிகள் குறைந்து 66076 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 42 புள்ளிகள் சரிந்து 19 ஆயிரத்து 616 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
பங்குச்சந்தை மிகவும் உச்சத்தில் இருப்பதை அடுத்து ஏராளமானோர் தாங்கள் செய்த முதலீட்டை திரும்ப பெற்று வருகின்றனர் என்பதும் லாபத்தை புக் செய்து வருவதால் தான் பங்கு சந்தை குறைந்துள்ளதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
அதே நேரத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் பங்குச்சந்தை உயரம் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்