சென்செக்ஸ், நிப்டி மீண்டும் உயர்வு.. இன்றைய பங்குச்சந்தையின் நிலவரம்..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (10:25 IST)
அதானி விவகாரம் காரணமாக பங்குச்சந்தை கடந்து சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தான் பங்குச்சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று பங்குச்சந்தை ஆரம்பத்தில் ஏற்றத்தில் இருந்தாலும் முடிவின்போது சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ், 250 புள்ளிகள் உயர்ந்தது உயர்ந்தது 60 ஆயிரத்து 940 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 17,915 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்று ஆரம்ப முதலே ஏற்றத்தில் இருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும் இன்றைய வர்த்தகத்தின் முடிவுகள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்