பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் இருநாள் பயணமாக பிகார், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு செல்கிறார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைப்பதாகும்.
இன்று புதிய ரயில்வே வழித்தடங்கள், மின்சாரப் பேருந்துகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், வீட்டு வசதி மற்றும் குடிநீர் திட்டங்கள் தொடங்கி வௌக்கும் பிரதமர் மோடி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பங்கேற்கிறார்.
இதையடுத்து பிகாரில், பிரதமர் மோடி வைஷாலி-தியோரியா ரயில் பாதை திட்டத்தை தொடங்கி வைத்து, புதிய ரயில் சேவையையும் துவக்கி வைக்கிறார். மேலும், பாட்லிபுத்திரத்தை கோரக்பூருடன் இணைக்கும் புதிய வந்தே பாரத் விரைவு ரயிலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன்பின் ஒடிசாவின் புவனேஸ்வரில், பாஜக அரசின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்.