பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (09:33 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் பங்குச்சந்தை இன்று காலை தொடங்கும்போதே சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகள் சரிந்து 61,465 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை அனுப்பி 78 புள்ளிகள் சரிந்து 18,178 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்று பங்குச்சந்தை குறைந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பங்குச்சந்தையில் தகுந்த முதலீட்டு ஆலோசகர்களை கலந்து ஆலோசித்து முதலீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்