ஒரு சிறிய தவறு கண்டுபிடித்தால்… 10.76 கோடி பரிசு – கூகுள் அறிவிப்பு !

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (13:34 IST)
கூகுள் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனை ஹேக் செய்து காமித்தால் 10.76 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என அறிவித்துள்ளது.

கூகிளின் ஸ்மார்ட்ஃபோன் பிக்சல் சீரீஸ் மொபைல்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்ஃபோன்களில் 'Titan M' என்ற புதிய வகையிலான சிப்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இவற்றை யாராலும் ஹேக் செய்ய முடியாது என கூகிள் நிறுவனம் புளங்காகிதம் அடைந்துள்ளது.

இதையடுத்து அப்படி யாராவது அதை ஹேக் செய்தால் 1.5 மில்லியன் டாலர் பணத்தை பரிசாகக் கொடுப்பதாக அறிவித்தது. இந்த பரிசு மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு 10.76 கோடி ரூபாயாகும். இதற்கு முன்ந்தாக ஆண்ட்ராய்டு அப்டேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததால் பக் பவுண்டி புரோகிராம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இதுவரை 29 கோடி வரை செலவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்