தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

Mahendran

சனி, 5 ஏப்ரல் 2025 (13:25 IST)
தர்பூசணி பழத்தில் ரசாயன ஊசி செலுத்தப்படுவதாக வெளியான தகவலால், விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனைச் சொன்ன சென்னை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு, தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரை மாற்றி, திருவள்ளூர் மாவட்ட அதிகாரி போஸ், சென்னையை கூடுதலாக கவனிக்கிறார்.
 
கோடை வெயில் அதிகரிப்பால் தர்பூசணி பயிரிடும் பரந்தளவு கூடியுள்ளது. ஆனால், “ரசாயன ஊசி” விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்கள் பயத்தில் பழத்தை வாங்க தவிர்த்தனர். இதனால், பழ விற்பனை முற்றிலும் குறைந்து, ஒரு டன் பழம் ₹14,000-இல் இருந்து ₹2,000-க்கு வீழ்ந்தது.
 
விவசாயிகள் பொருளாதார பாதிப்புடன் மன அழுத்தத்தையும் சந்திக்கின்றனர். வதந்திகளால் பாதிக்கப்பட்ட தர்பூசணி விற்பனையை எதிர்த்து பழ வியாபாரிகள் கோயம்பேட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சதீஷ்குமார் வெளியிட்ட விழிப்புணர்வு காணொளியே குழப்பங்களுக்கு காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
 
பின்னர், சதீஷ்குமார் “தர்பூசணியில் ரசாயனம் கண்டறியப்படவில்லை, ஆனால் கெட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என விளக்கம் அளித்தார். இந்த நிலையில் அவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்