இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி… வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:22 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்ட நிலையில் கடந்த 18 ஆம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்