இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி எடுத்த ஒரு முடிவுதான் கிரிக்கெட் உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த அணி 50 ஓவர்களையும் தங்கள் சுழல்பந்து வீச்சாளர்களைக் கொண்டு மட்டுமே வீசியது. அகேல் ஹுசேன், ரோஸ்டன் சேஸ், கேரி பியரி, மோட்டி, அதான்ஸே ஆகிய ஐந்து சுழலர்கள் தலா 10 ஓவர்களை வீசினர். 50 ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் இப்படி 50 ஓவர்களையும் சுழல்பந்து வீச்சாளர்களே வீசியது இதுவே முதல் முறை.