ஆடும் லெவனில் இருந்து பாபர் அசாம் நீக்கமா?... பாகிஸ்தான் கோலிக்கெ இந்த நிலைமையா?

vinoth
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (14:36 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.

இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார்.

இதையடுத்து இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் சேர்த்தும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட்டில் பல அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி அந்த நாட்டு கோலி என அழைக்கப்படும் பாபர் அசாமை ஆடும் லெவனில் இருந்து வெளியில் வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்