நீண்ட சரிவுக்கு பின் பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (09:50 IST)
பங்கு சந்தை கடந்த சில நாட்களாக சரிந்துள்ள நிலையில் நீண்ட சரிவிற்கு பின்னர் தற்போது பங்குச்சந்தை இன்று சற்று உயர்ந்துள்ளது. இன்றைய பங்கு சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 57 ஆயிரத்து 812 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை ஆண்டு 53 புள்ளிகள் உயர்ந்து 17042 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று காலை பங்கு சந்தை உயர்ந்தாலும் இன்று மாலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத அளவில் இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை மற்றும் அமெரிக்க வங்கிகளின் திவால் ஆகியவை காரணமாக பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து வருகிறது என்பதும் இந்த சரிவு மேலும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்