மாங்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். அரிசியை கழுவி தண்ணீர் சேர்த்து சாதமாக, உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். பின்பு 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து ஆற விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளிக்கவும். சிவந்து வந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, மாங்காய்த் துருவல், தேங்காய்த் துருவலை சேர்த்து லேசாக வதக்கி உப்பு சேர்த்து இறக்கவும். இத்துடன் சாதம், வேர்க்கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்பு: சாதம் மஞ்சள் நிறத்தில் வேண்டுமென்றால் வதக்கும் பொழுது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். மாங்காயை குழைய வதக்கக் கூடாது.