விஜய்சேதுபதியின் அடுத்த படம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:00 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன 
 
ஆனால் இந்த படம் ஒரு சில பொருளாதார பிரச்சினை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. 
 
இந்நிலையில் இந்த படம் குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது 
 
இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே மிக விரைவில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்