வாடிவாசல் தாமதம் ஆவது இந்த காரணத்தால்தான்… கலைப்புலி தாணு சொன்ன தகவல்!

vinoth
புதன், 24 ஜூலை 2024 (14:44 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்கவில்லை. அதனால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் வாடிவாசல் படம் பற்றி பேசியுள்ள தாணு “சில நாட்கள் ஷூட்டிங் எடுத்தோம். ஆனால் உண்மையான காளைகளை வைத்து ஷூட் செய்வது ரிஸ்க். அதனால் கிராபிக்ஸ் காளைகளை உருவாக்கி வருகிறோம். அதனால்தான் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஆகிறது. வாடிவாசல் படத்தில் கண்டிப்பாக சூர்யாதான் நடிப்பார். அதில் எந்த மாற்றமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்