சூர்யா 42 பிஸ்னஸ் 500 கோடியா?... ஷாக் ஆன தயாரிப்பாளர் தனஞ்செயன்!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (08:11 IST)
நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை சூர்யா படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இந்த படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரைத்திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் பிஸ்னஸ் தொடங்கி விட்டதாகவும், கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதற்கு இப்போது பதிலளித்துள்ளார் இந்த படத்தின் எக்ஸ்க்யூட்டிவ் தயாரிப்பாளர் கோ தனஞ்செயன். சமீபத்தில அவர் அளித்த நேர்காணலில் “படத்தின் வியாபாரம் பற்றி வரும் தகவல்கள் எல்லாம் மிகைபடுத்தப்பட்டவை. அப்படி ஏதாவது தொகை கிடைத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்