கண்டிப்பாக புறநானூறு படத்தை எடுப்பேன் – இயக்குனர் சுதா கொங்கரா!

vinoth
புதன், 24 ஜூலை 2024 (09:50 IST)
சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்பட்டது.

படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் புறநானூறு திரைப்படம் பற்றி சமீபத்தில் பேசியுள்ள சுதா கொங்கரா “புறநானூறு திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப் போடப்பட்டுள்ளது. ஆனால் என்றாவது ஒருநாள் நான் அந்த படத்தை எடுப்பேன். இறுதிச் சுற்று மற்றும் சூரரைப் போற்று படத்தை விட பல மடங்கு எனக்கு நெருக்கமான படமாக அது இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்