அடுத்த படம் பேன் இந்தியா லெவலில் ரீச்சாகும்… இயக்குனர் மோகன் ஜி நம்பிக்கை!

vinoth
புதன், 18 செப்டம்பர் 2024 (07:28 IST)
இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சர்ச்சையான திரைப்படங்களான திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார். கடைசியாக அவர் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான படங்களாக அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்களில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்ந்து ட்ரோல் செய்யப்படுகின்றன. இந்நிலையில் இப்போது மோகன் ஜி தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார். தன்னுடைய திரௌபதி படத்தின் கதாநாயகனான ரிச்சர்ட்தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் பற்றி அவர் நம்பிக்கையாக பேசியுள்ளார். அதில் “என்னுடைய அடுத்த படம் டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. தீபாவளி அன்று டைட்டில் அறிவிப்பு வரும். நானும் ரிச்சர்ட்டும் மீண்டும் இணையும் இந்த படம் எங்கள் சக்திக்கு மீறிய படம். இந்தியா முழுவதும் பேசப்படும் படமாக அந்த படம் இருக்கவேண்டும் என உழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்