இளையராஜாவுக்கு மஞ்சும்மெல் பாய்ஸ் குழு இழப்பீடு வழங்கவில்லை: வழக்கறிஞர் விளக்கம்..!

Siva
புதன், 7 ஆகஸ்ட் 2024 (12:07 IST)
சமீபத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்றை பயன்படுத்தி அதற்காக 60 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியதாக கூறப்படும் நிலையில் இளையராஜாவுக்கு எந்தவித இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை என அவருடைய வழக்கறிஞர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள திரைப்படமான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தில் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலி என்ற பாடலை பயன்படுத்திய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் பதிப்புரிமையை மீறியதாக கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மஞ்சும்மெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் இளையராஜாவுக்கு 60 லட்சம் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியான நிலையில் இந்த தகவலை இளையராஜாவின் பி ஆர் ஓ மற்றும் வழக்கறிஞர் மறுத்துள்ளனர்.

இதுவரை இளையராஜாவுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும், து அதேபோல் இழப்பீடு வழங்குவது குறித்து எந்தவிதமான பேச்சு வார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்றும் கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்