இயக்குநர் சுசீந்திரனின் 'சாம்பியன்'!

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (14:04 IST)
'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற படத்தை சுசீந்திரன் கடைசியாக இயக்கி இருந்தார். இதைத்தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் 'சாம்பியன்'. கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவுடைந்த நிலையில், டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. படம் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
'சாம்பியன்' படத்தில் புதுமுகம் ரோஷன் ஹீரோவாகவும்,  டப்ஷ்மாஷ் புகழ் மிருனாலினி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். 
 
சுசீந்திரன் ஏற்கனவே வெண்ணிலா கபடி குழு, ஜீவா போன்ற படங்கள் விளையாட்டை மையமாக வைத்து இருந்தன. இவை இரண்டுமே வெற்றி படமாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து, கால்பந்தை மையமாக வைத்து அவர் எடுத்துள்ள 'சாம்பியன்' படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்