விஜய்யின் அடுத்த படத்தில் வில்லனாகும் அர்ஜூன்!

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (22:30 IST)
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது
 
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அவர் தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை கவனித்து கொண்டே விஜய் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் கவனித்து வருகிறார்.
 
விஜய்-லோகேஷ் இணையும் இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டர் ஹீரோவுக்கு இணையான வலுவான கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அர்ஜூன் வில்லனாக நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் சூப்பர்ஹிட் என்பது தெரிந்ததே.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்