தமிழில் ரி எண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா… இயக்குனர் இவர்தான்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:41 IST)
அனுஷ்கா ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார். 

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இது சம்மந்தமாக இயக்குனர் ஏ எல் விஜய் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், அதில் விரைவில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்