லால் சலாம் படத்துக்குப் பின்னர் மீண்டும் இயக்குனர் ஆகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

vinoth
புதன், 12 பிப்ரவரி 2025 (11:52 IST)
ரஜினிகாந்த் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே ‘3’ மற்றும் ‘வைராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதன் பின்னர் கடந்த ஆண்டு அவர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ படத்தை இயக்கினார். அந்த படம் படுதோல்விப் படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்து போனதாக அவர் சொன்னதெல்லாம் கேலிப் பொருளாக ஆனது.

இது சம்மந்தமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,”லால் சலாம் படத்தின் இயக்குனர் கட் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும். தொலைந்துபோன காட்சிகளை எல்லாம் கண்டுபிடித்து அதில் சில காட்சிகளை சேர்த்துள்ளோம். தியேட்டரில் பார்த்ததை விட இந்த வெர்ஷன் வேறு விதமாக இருக்கும். இதுதான் நான் உருவாக்கிய கதைப்படி இருக்க வேண்டிய படம்” எனக் கூறியிருந்தார். ஆனால் இதுவரை படம் ஓடிடியில் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்க குழந்தைகளுக்கான படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.  மேலும் இந்த படம் நேரடி ஓடிடி திரைப்படமாக ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்