நடிகர் பிரகாஷ் ராஜ்யை பேரின்பப்படுத்தும் கொரோனா லாக்டவுன்...!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (10:19 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகனுடன் இருக்கும் கியூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.


இந்நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் தன் தோட்டத்தில் விளைந்ததை அறுவடை செய்து "பண்ணை தோட்டத்தில் அறுவடை செய்வதும்,  இயற்கையோடு உரையாடுவதும் பேரின்பம் .. வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறி தனது அழகிய லாக்டவுன் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார் என்பதை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்