7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அபாரம்

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (07:42 IST)
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய பெண்கள் அனி 50 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. தானியா பாத்யா 68 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்னும், ஹேமலதா 35 ரன்னும் எடுத்தனர்.

இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 48.1 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் அணி ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்