தற்போது நடைபெற்று வரும் 18 ஆவது ஐபிஎல் சீசனில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்று புள்ளிப் பட்டியலில் பின் வரிசையில் இருந்த மும்பை இந்தியன்ஸ், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை வென்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 116 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அஸ்வனி குமார் மொத்தம் 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். அவருக்கு இன்னுமொரு ஓவர் மீதமிருந்தும் அவருக்கு தொடர்ந்து ஓவர் கொடுக்காமல் பவுலரை மாற்றினார் ஹர்திக் பாண்ட்யா. இதனால் அவர் முதல் போட்டியிலேயே ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை இழந்தார். இது சம்மந்தமாக போட்டி முடிந்த பின்னர் ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.