சவுக்கு சங்கரின் மனு தள்ளுபடி.. விளம்பர மனுதாக்கல் வேண்டாம் என கண்டிப்பு..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (18:29 IST)
சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி விளம்பரத்திற்காக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம் என கண்டிப்பாக கூறியுள்ளார்.
 
கடலூர் கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 76 புத்தகங்களை கடலூர் சிறையில் உள்ள கைதிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் இதனை சிறைத்துறை டிஜிபிக்கு பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் குறிப்பிட்டு இருந்தார் 
 
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த புத்தகங்களை நீங்கள் படித்திருக்கிறீர்களா? கைதிகளின் வாழ்க்கைக்கு இந்த புத்தகங்கள் எவ்வாறு உதவும் என்று கூறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். மேலும் விளம்பர நோக்கத்திற்காக இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும் முன் இந்த புத்தகங்கள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் சவுக்கு சங்கருக்கு கண்டனம் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்