வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (10:34 IST)
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக முன்னரே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தபடியே தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா, ஒரிசா இடையே வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்