வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்றிரவு வெளுத்து கட்ட போகும் கனமழை..!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:25 IST)
அரபிக்கடலில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று இரவு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்