மத்திய அரசின் பட்ஜெட் மூலம் தமிழகம் பயன்பெறும்; முதல்வர் எடப்பாடி கருத்து

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (17:54 IST)
வேளாண்துறைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி கூறியுள்ளார்.

 
2018-2019 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் வேளாண்துறை, ரயில்வே மேம்பாடு மற்றும் நவீன இந்திய திட்டம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். 
 
எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
வேளாண்துறைக்கு மத்திய அரசு நிது ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மெகா உணவு பூங்கா திட்டத்தால் தமிழகம் பயன்பெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்