பல வியாதிகளை குணப்படுத்தும் அற்புத மருந்தாக விளங்கும் கறிவேப்பிலை !!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (13:55 IST)
கறிவேப்பிலையிலுள்ள உயிர்ச்சத்துக்கள் என்னென்ன வென்பதை ஒவ்வொருவரும் அறியாததே இதற்கு முக்கிய காரணமாகும்.


அத்துடன் சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் அடங்கியுள்ளது. கண்களுக்கு வலிமை தருவது ‘A’ சத்தாகும். ஆகையினால் இதனை சட்னியாக தயார் செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டால் கண் சம்பந்தமான எந்த நோயும் அகன்று விடும்.

சமையலில் முக்கியப் பங்கு வகிப்பது கறிவேப்பிலையாகும். கறிவேப்பிலையை மணத்திற்காக அடங்கியுள்ளதை அறியமாட்டார்கள். உபயோகப்படுத்துகின்றவர்கள் அதில் மருத்துவக் குணம் கறிவேப்பிலையில் வைட்டமின் ‘A’ சத்து மிக அதிகமாக உள்ளது.

பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். கண், பல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும். வயோதிகக் காலத்திலும் கண் பார்வை மங்காது. உடல் கட்டுத் தளராது. அகத்திக் கீரைக்கு அடுத்தப்படியாக அதிகச் சுண்ணாம்புச் சத்துள்ளது கறிவேப்பிலை ஒன்றுதான்.

கறிவேப்பிலை பல வியாதிகளைக் குணப்படுத்தும் அருமருந்தாக இருந்து வருகிறது. சீதபேதி மற்றும் வயிற்றுவலி உள்ளவர்கள் கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் நோய் விரைவில் குணமாகும்.

கறிவேப்பிலையைச் சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து எடுத்து அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து, அரை ஆழாக்களவு எருமைத் தயிரில் போட்டுக் கலக்கிக் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் சீதபேதி குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்