கேவலம் மரணத்திற்கு பயப்படுபவன் நானல்ல - வாஜ்பாயின் மரண கவிதை

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (08:18 IST)
மரணத்திற்கு முன்பு வாஜ்பாய் மரணம் பற்றி ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

நம் நாட்டின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5.05 மணிக்கு காலமானார். வாஜ்பாய் பல்வேறு அற்புதமான திறமைகளைக் கொண்டவர். இவருக்கு கவிதைகள் எழுதுவதில் மிக்க ஆர்வம்
 
அப்படி ஒரு முறை நியூயார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற போது உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மரணம் பற்றின ஒரு கவிதையை எழுதினார். அந்த கவிதைக்கு "மரணத்தோடு மோதிவிட்டேன்" என்று தலைப்பு போட்டார். 
 
இந்த கவிதையில் அவர் மரணம் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
 
கவிதையின் சில வரிகள்... 
 
மரணத்தின் வயது என்ன? 
இரண்டு கணம் கூட இல்லை. 
வாழ்க்கையின் தொடர்ச்சிகள் 
இன்று நேற்று வந்தவை அல்ல. 
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று. 
மனதைத் தொலைத்து விட்டு மீண்டும் நான் வருவேன். 
கேவலம் மரணத்திடம் ஏன் பயம் கொள்ள வேண்டும்?
 
மரணமே! 
திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே. 
என்னை எதிர்கொண்டு நேரடியாக பரிட்சித்துப் பார். 
 
இவ்வாறு மரணம் குறித்து வாஜ்பாய் எழுதியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்