இனி ஊழல் புகார் வரக்கூடாது : தனது எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (16:46 IST)
மீண்டும் ஒரு முறை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் மீது ஊழல் புகார் எழக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
 
அரவிந்த் கெஜ்ரிவால், தனது அமைச்சரவையில் இருக்கும் ஆசிம் கான் என்பவரை நேற்று அதிரடியாக நீக்கினார். அவர் மீது ஊழல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில், மீண்டும் ஊழல் புகார் எழக்கூடாது என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை எச்சரித்துள்ளார். மேலும், கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அவர்களின் குடும்பத்தோடு நாளை சந்திக்க இருப்பதாகவும், அரசியலுக்கு வந்ததன் நோக்கத்தை அவர்களுக்கு நினைவுட்ட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.