கேரள வெள்ள நிவாரண நிதி - ரூ.1027 கோடியாக உயர்வு

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (10:12 IST)
உலகமெங்கிலும் இருந்து கேரளாவிற்கு வந்த நிவாரண நிதி 738 கோடியிலிருந்து 1027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது  என செய்திகள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 483 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டது.
 
தற்பொழுது கேரளாவில் இயல்பு நிலை திரும்பி, மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
நேற்று முன்தினம் கேரளாவில் நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகஸ்ட் 28-ந் தேதி வரை கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்காக உலகமெங்கிலும் இருந்து 738 கோடி ரூபாய் நிவாரண நிதி வந்திருப்பதாக  கூறியிருந்தார். 
இந்நிலையில் அந்த நிவாரண நிதியானது தற்பொழுது வரை 1027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்