சீன ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய தூதர் பங்கேற்க மாட்டார்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:03 IST)
சீனாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய தூதர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. 
 
சீனாவின் தலைநகர் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கல்வான் தாக்குதலில் தொடர்புடைய ராணுவ வீரர் ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் செல்ல உள்ளார்
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய தூதர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் சீன ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது இந்த விவகாரம் தொடர்பாக சீன தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்